<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 122 சதிராடும் வேளை அன்பே
சதிராடும் வேளை அன்பே
துணைசேர வா இங்கே

இடை கோர்த்து ஆட
நாம் இசைப் பாட்டில் ஐக்கியமாக

போர் வானில் சாந்த மேகம்
படை சூழ்ந்து பொழியும் நேரம்
நிகழ்காலம் ஈரம்
ஆனால்,
பிரகாசிக்குதே நாளை

(சதிராடும்...

கடந்து வந்தது பழமையின் கனம்
காத்திருப்பது புதுமையின் பலம்
சொந்த தேசமே பழமையின் குறி
சர்வதேசமே புதுமையின் நெறி

போராட்டம் எல்லோர்க்கும் பகையாகுமே
நேசம்தான் மொழி இப்போது
தேசங்கள் மறந்தால் தப்பேது?
நாட்டுக்கு எல்லைகல் அப்போது
நட்புக்கு வேலிகள் எப்போது?

(சதிராடும்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com