<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 121 தூர தேச ஓசைகளை
தூர தேச ஓசைகளை
சொந்த மொழி கொண்டாடுதே

வட கிழக்கின் வாத்தியத்திலே
தென்மேற்கின் தாள தாக்குதல்

தூர தேச ஓசைகளை
சொந்த மொழி கொண்டாடுதே

வெங்களத்தின் பேரிகைகள்
வெள்ளுடையில் தாரகைகள்
ஆட வாயென ஆடவர், கொஞ்சிக் கெஞ்சிட

வாழையெனும் காலழகு
ஆடவனின் தோள்களின் மேல்
தாவி விழும் சாகச சந்தோஷமென்ன

சொர்கத்துல பண்டிகை நாளும் வந்தா
கலியாட்டம் இவ்வளவு ருசித்திடுமா?

(தூர தேச...

சந்தனத்தை நகலெடுத்து
மேனியொன்றை அவன் தரிக்க
உருவான துருவம் பெண்ணானதோ?

சங்கடத்தில் நிழல்கொடுக்க
சங்கமித்த நாளன்றே
உருவான துருவம் இசையானதோ?

ஊரு தேசம் என்றெல்லாம் எல்லைகள் எங்கே?
இசையதின் சாம்ராஜ்யம் இதயங்களே

(தூர தேச...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com