<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 120 திண்டாடுதே மனது
திண்டாடுதே மனது நீ இல்லாத ஓர் பொழுது
பொய்யான மொழி எதற்கு மெய்யாக நான் நினைப்பதற்கு
விடைபெரும் உன் உருவம் நினைவுக்கு நிரந்தரம்
பிறைமுகம் பார்த்தபின்னே இதயமுன் துறைமுகம்

(திண்டாடுதே...

புல்லாங்குழல் இசைத்தாலும் தீயானதே உணர்வு
சில்லென்று நீர் குடித்தாலும் சூடானதே கனவு
இரவிருந்தும் உறவு இல்லை
அந்தரங்கத்தில் அந்தரம்

நிழற்குடையே நினைவு என்றால் அதற்கடியில் நான் தனியே
தனிமையிலே பகிர்ந்துகொள்ள இருப்பதெல்லாம் தனிமையே

(திண்டாடுதே...

உச்சிவெய்யில் வேளையிலும் மனமோ மூடுபனி
அச்சுப்பிழை ஆனதே நீ இல்லாத முகவரி
ஊனமுண்டு காயமில்லை
இதன் பெயர்தான் காதலோ?

அதிகறிக்கும் ஆசைகளை தனிமை நிலை என்றார்
அருகினில் நீ வருவதென்றால் கொட்டிவிடவும் தயார்

(திண்டாடுதே...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com