<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 118 யுத்தக் காதல்
தலைமேலே
வானே தெறித்து, சிதறி, புகைந்து, பொசுங்கிவிடும் போரில்
உடல் ஒரு பொருட்டா?
உடைந்தது மனமே

உடற்சிகிச்சை பெற
நானும் ஒப்படைக்கப் பட்டேன்
குண்டு வெடிக்கையிலும்
கூடாரம் மருந்து கொடுக்கிறது

(தலைமேலே...

மறைந்து போனவரை
நெஞ்சு நினைத்து நோகிறது
பிழைத்தும் பயன் தரா
நிலையில் வீரம் வருந்திடுது

தாய்பாசம்
பார்த்திராத போர்களத்திலே
வெள்ளாடை சூடியே
கனிவாகவும், கருத்தாகவும் உயிர்காத்தாயே
மருந்தூசிகள் தரும்போதிலும் மகிழ்வித்தாயே

போர்கண்ட காலம்
உடல் மனம் சீருமே
உடல் ஊனம்
ஏவுகனையால்
மனம் தூறும்
உந்தன் பணியால்

தலைமேலே...
வானே தெறிது, சிதறி, புகைன்து, பொசுஙிவிடும் போரில்
உடல் ஒரு பொருட்டா?
மனமிங்கு மிதக்க

உடைந்து போன சிலை
அதை ஒட்ட வைத்த கலை
மெழுகுவர்த்தி குணமே
உன்னால் வாசபர்த்தி மனமே

இன்னல் தந்து
உன்னைத் தந்து
இன்னல் தந்து
உன்னைத் தந்து

கொடுத்து வாங்கும் இறைவா
இவளைக் கொடுத்து ஏமாந்தாய்
வருகையினாலே துயர் துடைத்தாள்
உடல் தோற்ற போரில் மனம் வெற்றி

ஒரு பாடலோடு வானம்பாடி வருகிறபொழுது துயரேது?

(தலைமேலே...

உயிரைப் பணயம் வைத்து
என் இதய நிலவை வென்றேன்
அவளின் சேவை கிடைத்தால்
நாளும் காதல் நோயை வளர்ப்பேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com