உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
# 117 சாகசமா சூசகமா?
சாகசமா சூசகமா?
சாதகமா சம்மதமா?
அனை கட்டியதால் மனைகெட்டவர் பாடு
சாகசமா சூசகமா?
விதைத்தவன் மீது
வேர் கொண்ட மான்பு
பறித்தவன் கைகள்
அறிவது ஏது?
கடலுக்கு மேலா மழையின் குறி?
இந்தப் புவியினில் ஏழை மிதிபட்டு சாக
சாகசமா சூசகமா?
சாதகமா சம்மதமா?
அனை கட்டியதால் மனைகெட்டவர் பாடு
சாகசமா சூசகமா?
மின்சாரம் தேடித்தான்
அனைக்கட்டு என்றார்
உற்பத்தி வேகத்தில்
ஆதிவாசியை ஆ...
பிறந்த மண் என்றும்
பிறப்புரிமை என்றார்
பிறந்தது ஏழை
என்றால் அண்டார்
ஓடை மீணை
கடல் கொல்லும்
ஏழை நீதியை
செல்வம் வெள்ளும்
நர்மத நதியின் நெடுமேனியெலாம்
விலங்குகளாகப் பூட்டிய அனைகள்
தேக்கியதெல்லாம் தண்ணீரல்ல
கண்ணீரடா
வெள்ளம் அனைகளில் அடங்கித் தூங்க
இல்லம் கொள்ளை கொண்டு அரசு போக
கொண்ட வித்தை எங்கும் செல்லாது
கற்க வித்தை ஒன்றும் இல்லாது
வறுமைக் கோடெனும் வாளால்
உயிரை மாண்டனர் ஊரார்
தந்திர அரசு
இயந்திர மனசு
Comments:
Post a Comment
