<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 116 வான் வரைந்து முடித்தான்
வான் வரைந்து முடித்தான்
மலையும் படைத்தான்
வனமும் கொடுத்தான்

இதையெலாம் ரசித்திடவே
நீரிலே மிதக்கவிட்டானோ?
பாய்மரப் படகென்றாலும்
படைப்பினில் திலைக்கவைத்தானோ?

நீரின் சுதந்திரம் நீங்கா நிரந்திரம்
தெய்வ ஏற்பாடுதானோ?
நாளும் வதைத்திடும் பாடு நிலத்தினில்
மனித முறன்பாடுதானோ?

தானாகப் படைப்பின் ரகசியஙள்
தேடாத மனங்களில் உதிப்பதில்லை
தேடாத மனதின் வழிநடந்தால்
தேனாக வாழ்வும் ருசிப்பதில்லை

(வான்...

இது போலவே
மனிதரின் உள்ளமும்
இருப்பதனால் தேடிடவே புலப்படும் உண்மை

நீரின் கோடுகளைப் பார்க்கவே, ஓ
நினைவுக் கூட்டுக்குள்ளே சிறகிடும்

பசுமை நினைவுகளும் ருசித்திடும், ஓ
மனதில் காலங்களே சிறைபடும்

வாழ்வே முன்னோக்கி உனைத்தள்ளும் ஓடம்
மனது நீர்போலே பின்னோக்கி ஓடும்

நீரின் கோடுகளைப் பார்க்கவே, ஓ
நினைவுக் கூட்டுக்குள்ளே சிறகிடும்

பசுமை நினைவுகளும் ருசித்திடும், ஓ
மனதில் காலங்களே சிறைபடும்

கிடைக்கின்ற மீணெல்லாம் அனுபவப் பாடம்
பறிபோன மீணெல்லாம் சந்தர்ப்பமாகும்
வந்தாலும் போனாலும் பாதிப்பு உண்டு
வருவோரும் போவோரும் உளிபோலன்றோ?

உனைப் போலவே
உலகமும் உள்ளதே
உறவாடி உறசாது பயனும் ஏது?

(வான்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com