உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
# 114 கேளாதோ எங்கள் கவிதை?
கேளாதோ எங்கள் கவிதை?
மாறாதோ எங்கள் சரிதை?
வானத்தில் சுதந்திரப் போராட்டம்
நாம் மாய்ந்தால் பருந்துக்கு கொண்டாட்டம்
ஏமாந்த கீழ்நாடு கொடியவர் என்று
பிரச்சாரம், தீர்மானம், அனுகுண்டு ஆராய்ச்சி என்னாச்சு
அன்னாச்சி?
கேளாதோ எங்கள் கவிதை?
மாறாதோ எங்கள் சரிதை?
ஐ.நா. சபையும் ஆள் விட்டுப் பாத்தாங்க என்னானது?
எல்லா நாடும் யோசிக்க சொன்னாங்க யார் கேட்டது?
எதிர்ப்பு சொன்னவன் எதிரிக் கூட்டம்னு பேரானது
விளக்கம் கேட்டவன் பேர்கெட்டுப்போய் பாழானது
இதுக்கு மேல் துன்பம் தாங்காது சாமி
இறந்த நிரபராதி எண்ணிக்கை காமி நீ
மிதித்துக் கொல்லத்தான் கீழ் நாடு என்று
அடித்துச் சொன்னது மேல்நாடு நன்று
நரகத்தை மண்ணில் கண்டோம்
சொர்க விலாசம் எங்கே?
மேல்நாடே சொர்கம் என்று பதில் வந்தது
(கேளாதோ...
தேடும் கொடியவன் சிக்காமப் போனது தீங்கானது
கிடைத்த கொடியவன் மேல் குண்டு போட்டால் சூடாறுது
ஒரு வலி போக்க மறு வலி சிகிச்சைதானே இது?
தொட்டிலும் ஆட்டி பிள்ளையும் கொள்ளும் ஊர்தான் அது?
உங்கள் வாகன எரிபொருள் தேவை
எங்கள் சடலம் எரிந்தது சேவை
சகித்துக் கொள்ளத்தான் கீழ் நாடு போலும்
சுகித்துக் கொள்ளத்தான் மேல்நாடு நாளும்
நரகத்தை மண்ணில் கண்டோம்
சொர்க விலாசம் எங்கே?
மேல்நாடே சொர்கம் என்று பதில் வந்தது
Comments:
Post a Comment
