<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 113 முகிலினை போக்கும்
முகிலினை போக்கும் புகைத்திரைக் கூட்டம் கட்டிடங்கள்
வானைத் துளைக்கும்
முகிலினை போக்கும் புகைத்திரைக் கூட்டம்
கட்டிடங்கள் வானைத் துளைக்கும்

பாதங்களின் கீழே பளிங்குத்தரையே
செம்மண் நிலத்தின் சமாதியாய்த் தாரே

(முகிலினை...

பச்சை வயல்வெளி தேடும் விழி
பார்த்த இடமெலாம் கற்சுவர் நரகம்
தென்றலைக்கூட குறுக்கிடும் தெருக்கள்
கோலமில்லா வாசல்கள்

விஞ்ஞானம் போற்ற, ஞானம் தோற்க,
இது போலே பல மாற்றங்கள்

(முகிலினை...

இரவைத் தேடி பகலும் அங்கு சென்ற போதுமே
விடியலாக்கிட வண்ண வண்ண தீபம் மின்னுமே
பொழுது சாயும் நேரம் பூர்வீகம் ஆகிப் போனதே
இன்றைய கடலும், மலைக்காடும் நாளை நகரமே

தாவரம் போனதே தாழ்வாரம் ஆனதே
இதுதான் நாகரீகமா?
தாவரம் போனதே தாழ்வாரம் ஆனதே
இதுதான் நாகரீகமா?

மண்வாசம் போச்சுதே, வாகன மூச்சிலே,
இது போலதான் பல மாற்றங்கள்

(முகிலினை...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com