<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 03, 2004
 
# 112 பெளர்ணமி
சந்தர்ப்பம் கதை மாற்றும், உயிர் நட்பில் துயர் நீங்கி
உயர் மோகம் உருவாகும் நிலை...

பெளர்ணமி
இனி நிரந்தரம்
பகல் கனவு இன்று நிஜம் நிஜம்
இருட்டரை
இனி பொறிதட்டும்
இள வட்டம்
இனி கொடி கட்டும்

தோழியர் கூடியும்
தனித்து நீ தெரிகிறாய்
விண்மீண்கள் பிறரடி
வெண்ணிலா நீயடி

உன் அருகில் என் நெஞ்சம் அது பள்ளிச் சிறுவரின்
விடுமுரை நாள்
உன் பிறிவில் என் நெஞ்சம் அது இறுதித் தேர்வின்
முந்திய நாள்

(பெளர்ணமி...

கட்டவிழ்த்த காளைகள் சூழ
கன்னிமகள் என்னில் என்ன கண்டாள்?
கப்பல் போல வாகனத்தை விட்டு
கட்டுமரக்காரனிடம் வந்தாள்
ஆருதல் நட்பில் மாறுதல் தந்தாள்
தோள் கொடுத்தேன் இதயம் கொடுத்தாள்

என் சட்டையில் உதட்டுச் சாயம்
பட்டதைப் பார்த்து நண்பர் காயம்
எந்தெந்த நாளில் எந்த ஆடை
என்னிடம் கேளு மனப்பாடம்
படிக்க வந்த பாடம் வேறு
படித்துச் சென்றதோ நூறு
புதிய மேடை அரங்கேறு

(பெளர்ணமி...

காலத்தின் சக்கரங்கள் யாவும்
காத்திறக்கி வைத்துவிடவேணும்
கனப் பொழுதை நீட்டிவிடு பாவம்
வாழ்கையிலே ஓய்வு ரொம்ப வேணும்
செல்வத்தை செலவழித்துத்தானே
நினைவுகளை சேகரிக்க வேணும்?

காதலில் காசு பணம் இல்லை
சேரியில் பூத்திடுமே முல்லை
சந்தர்ப்பம் கால நேரம் ஏது?
காதல் உன் வாசல் வரும்போது
காகிதம் நூல் இணைந்தே பட்டமாகுது
காதலில் சேர்ந்த நெஞ்சம் வானுலாவுது
துயரை தள்ளி உயரு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com