<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 03, 2004
 
# 111 போராடுதே மனம்
போராடுதே மனம்
புலனாய்வதில் தினம்

படைப்பெதிர்பார்த்திரா சப்தங்கள்
திகைக்க திலைக்க வைக்கும் ஓசைகள்
இறைச்சலில் இசையைத் தேடியே
ஒலிகளைச் சல்லடையில் வீசியே

போராடுதே மனம்
புலனாய்வதில் தினம்

வேண்டா வசையோ கடலளவு
தேடும் இசையோ முத்தளவு

செவிகள் மூழ்கிடும் கடலிலே
இசையின் முத்துக்கள் குறைச்சலே

நித்திலங்கள் மின்னும் இசைமண்டபம் கட்ட

போராடுதே மனம்

உயிர்வாழும் வரையில்
கேட்டு ரசிக்கும் பாடலில்

மருந்தாகவேனும்
கொஞ்சம் கற்பனை சேருங்கள்

கூச்சல் மொழியினிலே
நீச்சலிடும் பாடல்களே

இவைதான் இனி தமிழிசையா?

போராடுதே மனம்

படைப்பெதிர்பார்த்திரா சப்தங்கள்
திகைக்கத் திலைக்க வைக்கும் ஓசைகள்
இறைச்சலில் இசையைத் தேடியே
ஒலிகளைச் சல்லடையில் வீசியே

போராடுதே மனம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com