<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 03, 2004
 
# 110 நண்பன்
கிடைத்திடாது இது போல் சொந்தம்
ரத்தத்தில் இணையாதிருந்தும்
சந்தர்ப்பத் தேவை இருந்தால் சிந்தும் உதிரம்
நட்பென்றால் உயிரும் பொதுவே

(கிடைத்திடாது...

பாசம் கண்ணை என்றும் மறைக்காது நட்பில்
என்னை நீங்கிய வேறோர் மனசாட்சி நட்பில்

நிதம் காணலாம்
என் வழிகாட்டிதான்

சுக துக்கத்தில்
என் பங்காளிதான்

உதவிக்கு முதல்வன் உரிமைக்கும் அவனே

பெற்றோர்க்கும் இவனே இன்னோரு மகனே

தொல்லை கொடுத்தே என் எல்லை விறியச் செய்வான் நண்பனே

பாதி ராத்திரி என்றாலும் வந்திடுவான்
பார்த்த மாத்திரம் தொல்லைகள் போக்கிடுவான்

விதி என்னும் சதுரங்க அரங்கத்தில் காத்திடுவான்
எனை மறந்த எனக்கென்னை அடையாளம் காட்டியே

உதாசினம் செய்யாமலே குறைகளை அவன் ஓட்டிடுவான்

வழக்கமெனும் புழுக்கத்திலே
தென்றலாகும் நண்பா
எனக்குமுந்தன் வேடம் உண்டு
உரிமை கொண்டாடடா

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com