<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 03, 2004
 
# 109 பூபாலமே கேள் வானமே
பூபாலமே கேள் வானமே
உன் வாசலில் கதிர் கோலமே
பொற்காலை விடிந்தாலுமே
பனி தூங்கும் பூங்காவிலே

இதயத்தில் உணர்ந்தாலுமே
நினைப்பு ஒன்று நடப்பு ஒன்று, பாதை ரெண்டு

(பூபாலமே...

நீர் வடிந்தும் பெயர் ஓடை என்று
இலை உதிர்ந்தும் மரம் இருக்கின்றதல்லவோ?
அனை கட்டியும் நீர் அசைகின்றது
பரிசின்றியும் நீ தொடர்வதில் பொருள் உள்ளது

ஆதரவில்தான் அன்புள்ளதோ?
அனுபவப் பாடம் தோல்வியின் பரிசோ?

பாற்கடலையும் சிறு பாய்மரம் கடக்கும்
ஓர் புயலினில் மாமலைகளும் சிதறும்

காலமண்ணின் கால்தடத்தில் நீ துரும்பே

(பூபாலமே...

இசைப்படைப்பில் இறைவனென்றால்
இனப்பிறிவு யார் பொருப்பு?
நண்மைகளை நயம் செய்த கை
தீமைகளை ஏன் துறத்தவில்லை?
இன்ப துன்ப பிளவு அத்தனையிலும் இருந்தால்
படைத்தவன் பெருமை ஒருபாதிதானே?

கேள்விகளை எழ வைத்ததும் அவனா?
பதில்களை மறைத்ததும் அவனா?

மூலத்தையும் முடிவையும் அறியாத மனிதா
உன் வாழ்வின் பொருள் என்பதும் புறியாத புதிரா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com