உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 03, 2004
# 108 என் இதயச் சாயலைத் தேடுகிறேன்
என் இதயச் சாயலைத் தேடுகிறேன்
வாழ்வின் அத்தனைப் போக்கிலும் கிடைக்கிறது
என் கண்கள் கவரும் நிறக் கலவை
பிறர் ஆடையில் கண்டால் இணைப்பு;
கண்கள் பரிமாரும் அன்பின் மொழி
உறவுக்கு அப்பால் ஓர் தவிப்பு.
என் நடை உடை பாவத்தின் காந்தம்
அந்நியரை சுண்டி இழுக்கையில் பிணைப்பு;
இதே நிலயில் பிறர் நானாக
அங்கும் உள்ளது இப்பிணைப்பு.
அந்தி சாயும் பொழுதை
விடை சொல்லி அனுப்பிவிட
கடலிடம் ஒதுங்கும் கூட்டத்தில்
அனைவருமே என் இதயப் பிரதி
இயந்திரமாய் கடைப் பொருளைப்
பார்த்துவரும் மனிதர்களில்
பிடித்த பாடலை முனுமுனுத்தால்
வழிப்போக்கனும் சிநேகிதனே
கலையின் சாரம் அலசுகயில்
என் கணிப்பைத் தெரிந்து வார்த்தைகளாய்
உருக்கொடுக்கும்போதெல்லாம்
உறவினனாகிறான் விமர்சகன்
ஒரே காரணமாய் சிரிப்பதிலும்
பிறர் ஒற்றுமை காட்டும் நிலை உண்டு;
என்னைக் காட்டிலும் சிறந்தவன்
என்று இதயம் வைக்கும் சிலை உண்டு
சொந்தமெல்லாம் நம்மைச் சார்ந்ததில்லை
நெஞ்சைச் சார்ந்ததுதான் சொந்தாமாகிறது;
நம் இதய வீதிக்கு நுழைவாசல்
எங்கெங்கேயோ இருக்கிறது
Comments:
Post a Comment
