உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 01, 2004
# 107 அராஜகம்
மண்ணுரிமையிலும் மத உரிமையிலும்
போர் தொடுக்கும் மானிடரே
சேகரிப்பெல்லாம் அதிகரித்ததா
பாதுகாப்பு தரும் அமைதியினை?
படைத்தவன் பேரில் பாசாங்கு
கிடைத்தவர் பேரில் பாசாங்கு
ஆதிக்க உணர்வின் அடிப்படைக் குற்றம்
அடுத்தவர் கீழென எண்ணுவதே
அராஜகத்தின் அடுத்த குற்றம்
வழிகாட்டியாய் தனை எண்ணுவதே
கோபுரமெங்கும் குழல் விளக்கு
இருண்ட பின்னும் ஜொலிக்கிறது
குடிசைக்குள்ளே விறகடுப்பு
பற்றாமலே இருக்கிறது
இங்கு தேவையை மீறி வாழ்வதனால்
அங்கு தேவைகள் கூட ஆசைகளே
Comments:
Post a Comment