<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 01, 2004
 
# 105 மந்தாகினி
வாலிபத் தோட்டத்திற்கழைத்த
முதல் குரல் மந்தாகினி
கணிதம் புகட்டும் உன் இல்லம் அடைந்த
ஒவ்வொரு திங்களும் பெளர்ணமி எனது
ஈரெட்டு பொல்லாத வயதே, வயதே
ஈரெட்டு பொல்லாத வயதே

வாலிபத் தோட்டத்திற்கழைத்த
முதல் குரல் மந்தாகினி

இலக்கணப் பிழை அது உறவெனும் வகுப்பிலே
ஆசிரியையின் மேல் என் ஆசை
உணர்ச்சியின் விதையே நடைமுறைப் பகையே
காதல்மடல் கொடுத்தேன் திருத்திக் கிழித்தாய்
என் கணக்கே தவரானதே

கேரள மலர் நீ, கிருத்தவ மதம் நீ,
எனைவிட வயதும் எத்தனையோ
இளம் வயது...இளம் வயது
இதற்கா தயங்கும்?
தனைச் சுற்றியே இளம்
சிந்தனை சுழலும்
முதிர்ந்த பின்னாலும் அசைபோடும்...ஆ

வாலிபத் தோட்டத்திற்கழைத்த
முதல் குரல் மந்தாகினி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com