<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 01, 2004
 
# 104 மேலே
மேலே...முகிலுக்கும் மேலே பறந்திடும் நிலையே
பருந்துக்கும் இது தூரமே
புஷ்ப விமானம் தோற்குமே
ஆளறவம் ஏதுமின்றி வானவெளியில் நீந்துமே

வகுப்பரைபோல் அமருகிறோம்
விருந்தினர் போல் உண்ணுகிறோம்
இயற்கையின் பல அழைப்புகளை வரிசைப்படி ஏற்க்கிறோம்

விரிந்திருக்கும் வானிலும் இடைஞ்சலுண்டு
இடநெறுக்கடி மனிதனின் அவல நிலை
கடல் கடந்திட திறமை நிறைய உண்டு
கால் நீட்டிட வழிகளில்லை

உடல் மேலே சென்றும்
மாறாது இந்த மனிதன் கதை
ஒரே பயணம் என்றும்
வசதிக்கேற்ற வாடிக்கை

சொர்கத்தில் பறந்தாலும்
ஏற்ற தாழ்வு மறைவதில்லை
சரிசம நிலை இருப்பதில்லை வேறுபாடு தொடர்கிறது

மனதளவில் குகைமனிதன் மாற்றமெலாம் தோற்றம்தான்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com