உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 05, 2004
கவரியைக் கவரிட
பூக்களை மோதி மனம் சிந்தி
தபலாவின் நீரோட்டத்தில்
கால் நனைத்து
குழலின் துவாரங்களில் ஒளிந்து விளையாடி
தம்புராவின் கைகளால் தன் நாடி பார்த்து
சாரங்கியின் மயக்க ஊசியில்
கிறங்கி
சலங்கையின் பூஜை மணிக்கு வணங்கி
பார்வையாலரின் கைத்தட்டலில் குடிபுகுந்து
தன்னைத் தானே பல வகையாய் வழங்கி
பெற்றுக்கொள்ளும் காற்றே
உன்னைப் புகழ் பாட
உன் தயவே வேண்டாமென்று
மெளனமாய் எழுதுகிறேன்
படித்துக்கொள்
Comments:
Post a Comment
