உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 06, 2004
பேத்தல்
வேர் ஊன்றியிருக்கும்
நம் குணங்களில்
மன நிலை எனும் கட்டுக்கடங்காத காட்டாறு
இழுத்துச் செல்லும் இடமெல்லாம்
நம் கணிப்புக்கு அப்பாற்ப்பட்டது
இந்தச் சிக்களில்
காலத்தின் மன நிலையும்
கைகோர்த்து சுழற்றிவிடும்
இப்படி இனம் புரியாதவைகளின்
இயக்கத்தால் அலைக்கழிக்கப்படும்
மனிதன்
எத்தனை குருட்டு கர்வம் இருந்தால்
தன்னைத் தானே இயக்குவதாய்
நினைத்து,
வாழ்க்கைக்கு வழிவகுத்து,
பிறர்க்கு வழி காட்டி,
தான் பெரிதாக
சாதித்துவிட்டதைப் போல்
தனக்குப் பின்
சந்ததிகளை வேறு
விட்டுச் செல்கிறான்
Comments:
Post a Comment
