<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 99 மனவெளியில் தனிப்பிறவிதான்
மனவெளியில் தனிப்பிறவிதான் சுற்றம் சூழல் அங்கில்லை
வீட்டுத் தலைவன், வேலைப் பணியாள் வேடம் ஒன்றும் அங்கில்லை

ஓரம்தங்கிய உதிரிலைகள் சாலையெங்கும் கூட
சீறும் எண்ணச் சாரல் சிறைமீட்ட
அமைதியின் அற்பனம் தெளிவு

மனவெளியில் நான் தனிப்பிறவிதான் சுற்றம் சூழல் அங்கில்லை


இயந்திர வாழ்கையது அடங்கின பிறகே நெஞ்சம்
சென்றடையும் ஏகாந்த அறுசுவைப்பாலின் தஞ்சம்

பூமியிலே மானிடனின் வேலைதான் என்னவோ?
நாடிவந்த பந்தங்களின் தேவைகளைச் செய்யவொ?

காலைப்போது அந்தக் கவலை
இரவு எனது சொந்தமே

சுதந்திர வாழ்க்கையிலும் கடமையின் கைதி மனிதன்
தன் நலத்தைப் பார்ப்பதற்கு
இரவிலும் சில மணி நேரம்

சேவைகள் கோடி செய்தும் சன்மானம் சிறிதுதான்
சாமத்தில் தேடி வரும் சுயவிலாசம் பெரிதுதான்

வானுலாவி திறிந்த எண்ணத்தை
விடியலில் விளங்கிடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com