உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
# 96 மார்கழி மனம் மாறுமோ?
மார்கழி மனம் மாறுமோ?
கோடையும் குளிர் காயுமோ?
தழுவிடும் மோகமே
ததும்புது சோகமே
இனி தனிமையில் இருவரும் ஒரு முறை இணைந்திடக் கூடுமோ?
தடை விதிமுறை மீறி விடுதலை முடிவுரை ஆகுமோ?
மார்கழி மனம் மாறுமோ?
கோடையும் குளிர் காயுமோ?
உன் மனத்திலே வேளி தாண்டியபின் ஊர் எல்லைகள் ஏது?
சம்மதித்தபின் சரணடைந்தபின் சந்தேகம் அது தீது
மதியாதோர் மாளிகை
அதற்குள்ளே மான் சிறை
ஞானம் தர போதி மரம்
ஞாயம் தர யாரடி?
மார்கழி மனம் மாறுமோ?
கோடையும் குளிர் காயுமோ?
இது ஒரு படிப்பினை
எனக்கில்லை குடுப்பினை
அட விதியும்கூட பேரம்போகம் பகடைக் கை
இதை அறியாது நான் அவளை நினைத்தால் அவல நிலை
வருங்காலம் வாழ்த்தலாம்
சரிதையை மாற்றலாம்
ஆறாது இந்த வடு
என்றாலும் போதும் விடு
இது ஒரு படிப்பினை
எனக்கில்லை குடுப்பினை
(மார்கழி...