<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 95 வரையறைக்கினங்கா உறவிதுவே
வரையறைக்கினங்கா உறவிதுவே
வரையறைக்கினங்கா உறவிதுவே

சலனமும் சபலமும் சிறுபிள்ளைத்தனமே
வரையறைக்கினங்கா உறவிதுவே

மாதவனின் மடலாயமென் மனதே
மாதவனின் மனதானதென் மடலே

கண்ணன் மீரா ஓர் அறிய அடைக்கலம்
அடைக்கலம் அறிய ஓர் மீரா கண்ணன்

(வரையறைக்கினங்கா...

சலனமும் சபலமும் சிறுபிள்ளைதனமே
வரையறைக்கினங்கா உறவிதுவே

உதடும் உதிரும் உன் பேர் சொல்லாது
உதிரும் உயிரும் உன் சொல் பெறாது
உதிரம் உறையும் உனை நினைக்காது
நீ எந்தன் உடைமை என நினைக்காது

நீர் செல்லும் ஓடையில் கதிரினை சுமந்தே
நீர் செல்லும் ஓடையில் முடிவுரை மறந்தே

கலப்பிடம் கருதா நீர் நிலை எனதே
கலப்பிடம் கருதா யாவையும் புனிதே

(வரையறைக்கினங்கா...

மீரா கேட்பதில் எதிரொளிப்பவனே
மீரா பார்ப்பதில் பிரதிபளிப்பவனே
மீறா மரபின் முறன் மூலமவனே
மீறாதிருந்திட முயர்ச்சிகள் இலையே

ஆதிக்கம் ஆனது அவன் செயலே
ஆதிக்கும் மீதிக்கும் அவன் பொருளே
ஆதரம் ஆதலை ஆதிபனே

(வரையறைக்கினங்கா...

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com