<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 94 கால்கள் ஓயா கடல் காற்றே
கால்கள் ஓயா கடல் காற்றே
காளை நெஞ்சின் நீர் ஊற்றே
தூங்கும்போது கதிரவனும்
அலைகளின் போர்வையில் அடங்கிவிடும்

காலம் இயங்கும் உனை மறந்து
கானமும் வருமா செவி அறிந்து
நீதான் இயங்கனும் வழிவகுத்து
கார் வானிலும் நிலவிருக்கு

யதார்த்தமாக இருந்து விடு
ஏழுவகைத் துன்பம் இனி வென்று
ஏற்ற, தாழ்வு
ஏழ்மை, செல்வம்
எடையிட்டுப் பார்த்தால் அது துன்பம்

சோகமழை பெய்கையிலே
சிரிப்புக் குடையை விறித்துவிடு

நானே நீராய் வருவேன்
ஓடம் உனைக் கரை சேற்க
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com