<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 27, 2004
 
# 92 விழி வாசலில்
விழி வாசலில்
மனக்கோலங்கள்
தெரிகின்றன
மொழி தேவையா?

செவி சாய்ப்பதில்
கரை சேர்வது
மொழி சல்லடை
செய்த மீதமே

உரையாடலில்
பிறர் வாடட்டும்
உறவாடுவோம்
விழிக் கூடலில்

அர்த்த ஏணியில்
மொழி கீற்படி
ஏறிப்பார்த்திடு
விழி மேற்படி

தன்னை வார்ப்பதும்
ஆழம் பார்ப்பதும்
என்னைச் சேர்வதும்
ஆசைக் கண்களே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com