உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 26, 2004
# 90 நீ தந்த வாக்கு
நீ தந்த வாக்கு நிலைத் தேரோ?
இங்கு தீயாய்ப் படர்ந்து இருளெனச் சூழுது என்னை இயலாமை
ஏறிய ஏணியும் தினமும் கொண்டு சேர்க்குது எனைக் கீழே
என்னாமோ? ஏதாமோ? யாராலே கூரு
காசு வசதி ஜெய்க்கும் காதலையே
யாசித்துச் சென்றாயே, சென்றாயே ஏளனப் பார்வை சிந்தி
நின்ற நிழல் கூட நெருப்பாச்சே
ஞானம் வரும் சேர்த்தே துயருடனே
என்னாமோ? ஏதாமோ? யாராலே கூறு
நீ தந்த வாக்கு நிலைத் தேரோ? இன்று போனாய் தோர்த்து
வாழ்வே பாடம் தானா? தேர்வு காண தோற்றேனா?
பாசமென்ன முள்ளா? நீக்க நீக்க வலியா?
வெட்ட வெட்ட வளரும் திட்டமிட்ட சதியா?
தோல்வி தரும் ஞானம்
வெற்றி தரலாது
ஒன்று சேர்ந்த அன்பும்
உண்மை ஆகிடாது