<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#9 காதலின் வாகனம்
காதலின் வாகனம்
கண்களே ஆகிடும்
வழி பார்ப்பதும்
துயில் தோர்ப்பதும்
காதல் செய்வதா
சொல்லுங்களே கண்களே

காதலின் வாகனம்
கண்களே ஆகிடும்

தினமும் தினமும்
பெருகும் பருகும் விரகம்

கலைப்பூட்டும் மஞ்சம் வேண்டும்
இளைப்பாற நெஞ்சம் வேண்டும்
தொடுவது காதல் குற்றமா

விழிவாசல் ஏக்கத்திலும்
மணக்கோலம் தூக்கத்திலும்
வரைகின்றதே காதலின் சாத்திரம்

வழி பார்ப்பதும்
துயில் தோர்ப்பதும்
காதல் செய்வதா
சொல்லுங்களே கண்களே

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com