<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 26, 2004
 
# 89 கடைப்பார்வையால்
கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?
விளங்காமலே அரங்கேறிடும் வினை ஏனம்மா? விபரீதமே

தவம் காப்பதால் வராது
தன் போக்கிலும் விடாது

தனை மறப்பதே காதல்
நினைவிழப்பதே காதல்

கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?

உடல் இயங்கும் வாழ்வின் தேவையறிந்தே உணர்ச்சிகள் மறைத்தே
மனம் மயங்கும் நிஜம்தனை மறந்தே உறவினில் நிலைத்தே

கனாவிலும் காந்தம் போல் ஈர்க்குமே
வினாவினால் அர்த்தம்தான் ஏய்க்குமே

இன்பம் மட்டும் கூட்டுமே

கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?

இதோ இதோ இவனுக்கு இனங்கு மனம் முடிவெடுத்தால்
இதையம்தான் இனங்கிடுமா?

கடைப்பார்வையால் எடைபோடுவாய் கணக்கீடெலாம் காதலாகுமா?
விளங்காமலே அரங்கேறிடும் வினை ஏனம்மா? விபரீதமே

தவம்காப்பதால் வராது
தன்போக்கிலும் விடாது

தனைமறப்பதே காதல்
நினைவிழப்பதே காதல்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com