<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, April 25, 2004
 
# 88 ஆசை என்றும் வெட்கம் அறிந்ததில்லை
ஆசை என்றும் வெட்கம் அறிந்ததில்லை
ஞானம், தேடும் மனிதனை அடைந்ததில்லை

விதி ஒரு நிலை
வரையரை இலை
மனம் ஒரு சுழல்
சுவை அதில் விழலே

விரதம் என்பது நாடகம் அதுவும் வேறொரு நண்மையின் வேண்டுதலே

(ஆசை...


ஆசா பாசம் தேவையா யாவுமே மாயையா?
வான்மதி பொய்யோ? மைய்யிருள் பொய்யோ? பார்வையின் மூலம் பொய்மையோ?
ஊடல், கூடல், தேடல் மெய்மையோ?
காதல், மோதல், சாதல் மெய்மையோ?
யார் விளக்குவது?
நேற்று, இன்று, நாளை மெய்மையோ?

நினைவோ
இது மனச் சறிவோ?
நிகழ்வோ
இது தேவ திகழ்வோ?

வாரணமாயிரம் கடந்திருந்தாலும் கேள்விகள் கேட்டு முடிவதில்லை


உறவு எலாம் பகற்கனவோ?
உரிமை காப்பதும் தேவையோ?

உணர்வதெல்லாம் பிரதிபளிப்போ?
உணர்ச்சியின் அடிப்படை உடற்பொருளோ?

வேதாந்தம் சித்தாந்தம் வார்த்தைப் பிழையோ?
ஆதாரம் இல்லாத வார்த்தை பிழையோ?

பாத்திரம் போல் விதியோ?
நீர்துளி நீ சிறையோ?

சாத்திரங்கள் சதியோ?
சாத்தியதேவர் கதையோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com