<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, April 25, 2004
 
# 87 கிராமிய காதலன்
சித்தாடைக்காரி மத்தாப்புப் போல சிரிச்சாளே
தூரி பாடியவ தீராத வேலையக் களைச்சாளே

கற்பனை சூடு உச்சந்தலையேரும்
கத்திரிக்கும் வெய்யில், ஒட்டிட நீ வேணும்
காத்திருக்க வெச்சா முத்த அபராதம்
மொத்த சுகம் தந்தா மச்ச அவதாரம்

காதும் காதும் வெச்சதப்போல
காதல் விவகாரம்
கண்ணும் கண்ணும் அடிக்கிற பந்தாய்
மனசு சதிராடும்

(சித்தாடைக்காரி...

பனையிலைக்கு ஊட பால் நெலவு அமைப்பு
கூரைச்சேலை இடையில் குளிரும் உன் இடுப்பு
வெக்கை என்னை வாட்டும், ஆனாலும் சிலிர்ப்பு
வெத்தலையப் போட்ட உன் மாதுளைச் சிரிப்பு

புள்ளி மானைக் கோலம் போட
கைவிரல் துடிக்கும்
கள்ளி உன்னைக் கண்டாப் போதும்
காலி வயிர் செரிக்கும்

(சித்தாடைக்காரி...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com