<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, April 25, 2004
 
# 86 கனவினில் வந்தது காட்சி
கனவினில் வந்தது காட்சி
அது களைந்ததுக்கில்லை சாட்சி
உறவுக்குத் தேவை ஆழம்
உணர்ச்சிக்கு ஏது மூலம்?
வந்து விளையாடு

நீ சுந்தரியாம்
நான் மன்மதனாம்
மனசை உன்னிடம் தந்தவனாம்
காதல் மன்மதனாம்

(கனவினில்...

ஒரு சந்தர்ப்பமாய் நீ சிரிப்பதை நான்
தரிசித்த முதல் நொடி
அதற்கங்கத்தின் எடையை தங்கத்தில் ஈடாய்
கொடுப்பதும் குறைச்சலடி

நம் காதலின் களியாட்டங்கள்
கொண்டாடித் தீராதடி
அத்தனை நாட்டின் அந்நிய செலாவணி
இருந்தும் பத்தாதடி

(கனவினில்...

அன்று மன்னர்கள் எல்லாம் மாளிகை நிறைய
மங்கையர் வைத்திருந்தார்
என் மாளிகை எங்கும் உன் முகம்தான்
நான் மன்னவன் என்றுரைத்தால்

பட்டம் பதவி மட்டும் பெற்றோர் மனதில்
காதல் தகுதி என்றால்
சட்டம் மீறி உன்னை சிறையிடுவேன்
நீ சம்மதம் என்றுரைத்தால்

(கனவினில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com