<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 85 போராளியின் மனைவி
எல்லைக்கோட்டைக் காவல் காக்க
உன் தகப்பன் போயிருக்கான்

கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு?
எங்க அப்பான்னு நீ கூறு

பட்டாடை பத்து வித பாவாடை
ஜிமிக்கித் தோடு வாங்கிக்கிட்டு வருவாக

ரத்தினத்தோடு, தங்கம், பவளம் எதுக்கு?
வைரம் உனக்கு முத்துப் புன்னகை இருக்கு

பட்டுப்பூச்சி எல்லாம் சட்டை தைக்குமே என் மகளுக்காக
பஞ்சவர்ணக்கிளி தாழப் பறக்குமே என் மகளச் சேர

ரத்தினதோடு தங்கம் பவளம் எதுக்கு?
வைரம் உனக்கு, முத்துப் புன்னகை இருக்கு

எட்டுபட்டிக்கும் ராணியப்போல நீயும் இருக்கிற காலம் வரும்
உன்னைக்கட்டிகொள்ள ஆயிரம் பேர் அப்பங்கிட்ட கேக்க வரும்

பொன்னே செல்லக் கண்ணே பிறிவு தீருமே

கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு
எங்க அப்பான்னு நீ கூறு

(எல்லைக்கோட்டை...

வெப்பக் காத்தா வீசும் பெருமூச்சு
வாய்க்கா பூரா கொட்டும் கண்ணீரு

சொந்த மண்ணுக்காக ரத்தம் சிந்த போன மன்னவனே
இந்த பொண்ணுக்காக வீடு வந்து சேரணுமே

வெப்பக் காத்தா வீசும் பெருமூச்சு
வாய்க்கா பூரா கொட்டும் கண்ணீரு

இன்னும் எத்தனை காலமா சாக்கு சொல்லி இதை தூங்கவெப்பேனோ?
மனசுக் குள்ளே போர்களமா பொழப்பு நடக்கும் எந்திரமா

பொன்னே செல்லக் கன்னே பிரிவு தேருமோ

கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு
எங்க அப்பான்னு நீ கூறு

(எல்லைக்கோட்டை...

தாமதமா இரவு நீளுதைய்யா
கண்ணசஞ்சா உன் சிரிப்பு கேக்குதைய்யா

எல்லைப் படை பத்தி சேதியெல்லாம் என்ன வதைக்குதைய்யா
கொள்ளை சனம் இங்கே இருக்கையில உன்ன பிறிக்கனுமா?

தாமதமா இரவு நீளுதைய்யா
கண்ணசஞ்சா உன் சிரிப்பு கேக்குதைய்யா

ஏறாத கோயில ஏறிப்புட்டேன் வேண்டாத சாமிய வேண்டிக்கிட்டேன்
பத்திரமா வீரப் புத்திரனா வந்து சேரணும் கேட்டுக்கிட்டேன்

பொன்னே செல்லக் கண்ணே விரைவில் சேருவோம்

கொண்டாருவான் பாரு
நம்ம ஜில்லாவுக்கே பேரு
வீரசிங்கம் யாரு
எங்க அப்பான்னு நீ கூறு

(எல்லைக்கோட்டை...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com