உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 84 பொன் வைகரை
பொன் வைகரை புலர்ந்தான் குன்றத்தின் தோள்களில்
புல் நுனிகளில் வெப்பத்தால் சிந்திடும் பனித்துளி
சோலைக்குள் சுடர் விரல்கள்
தொட்டு நீக்கிடும் பனித்திரை
ஊரெங்கும் கூவல் இன்னிசை
தூக்கம் ஓட்டுமே சேவல்கள்
நேரத்தை நிர்ணயிக்க கோவில்மணி ஓசையும்
கொஞ்சம் தள்ளியே புகை மண்டிட ரயில் தன்குரல் எழுப்பிடும்
(பொன்...
குளக்கரையில் காலை தரிசனங்கள்
நான் சொல்வதிளம் பெண்களை
உந்தும் பாரமாய் சின்னஞ்சிறுவரை
கோனிப் பையைப் போல் புத்தகங்கள்
சந்தையில் விற்பனை ஆரம்பம் கடைக்கு கடை ஏலங்கள்
சித்திரமாய் வீதி எங்குமே பூசனிப்பூவுடன் கோலங்கள்
(பொன்...