<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 83 காலம் போற்றும் கவிதை படைக்க
காலம் போற்றும் கவிதை படைக்க
எண்ணம் தீட்டி எழுத்து கோர்ககிறேன்
தாழை மலர்கள் தொலைவில் குயில்கள்
இன்பம் ஊட்டி எண்ணம் களைக்குதே

தென்றலே நீயும் வீசாதே
வெண்ணிலவே கண்ணைக் கூசாதே
இயற்கையே கவிதை எழுதவிடு
இடையூரு செய்யாதிருந்துவிடு

(காலம்...

மரமே இது ஞாயம்தானா?
மலர்கள் உதிர்த்து கவனம் களைக்கிறாய்
குயிலே இது ஞாயம்தானா
கூவிக்கூவி எதற்கு அழைக்கிறாய்

பாறை மணல்வெளி—பனிந்திடும்
பசுமைப் புரட்சியால்

கறிசல் மனங்களும்—கனிந்திடும்
கவிதைக் கிளர்ச்சியால்

ஏரிக்குள்ளே மேகம்
இறங்கிவந்தது போல
நாரை நகர்ந்து
உவமை வழங்குதே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com