உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 81 சக்கரமே சுழல் சக்கரமே
சக்கரமே சுழல் சக்கரமே
அக்கரையில் என்றும் அக்கரையே
பாடற்குழு:
முன்பு வந்தவன் முன்னோடி
பின்பு வருபவன் பரிகாரி
நடுவில் வந்து நாம் நாடோடிகளாய் வாழ்கிறோம்
பிறப்பை மகிழ்ந்தோம் நம் கைசேர்ந்த குழந்தைகளில்
இறப்பை அறிந்தோம் நம்மை கலைந்தோடும் உறவுகளில்
வாழ்வை அறிவோம் நாம் கடந்தோடும் எல்லைகளில்
(சக்கரமே...
இருள் நேரப் பிறை ஒன்று
பகல் நேரக் கதிர் ஒன்று
இரு விழிகள் வானுக்கு என்றானதே
நெறி சொல்லும் வழி ஒன்று
ஊர் சொல்லும் வழி ஒன்று
இடையில் நீ சதிராடும் நிலையானதே
ஒரு விழி மட்டும் மூடி விட்டால்
மறு விழி காட்டிடும் வழி என்று
நீ நினைத்தாலே போதும் இந்த சமுதாயம் சாயம் போகும்
(சக்கரமே...
சந்தர்ப்பம் சந்தோஷம்
இரண்டிற்கும் அளவேது?
பின்னதற்கு முன்னதை அதிகரித்திடு
கவலைகள் துன்பங்கள்
இல்லாத வாழ்வேது?
ஞானத்தின் வழி என்று அனுபவித்திடு
கவலைகள் நம்மை மூழ்கிடுமா?
நாம் அதில் முத்துக்குளித்திடுவோம்
என்ற மன நிலையில் நீ வாழ்ந்தால் இங்கே உன்னை மீற ஆளில்லை
(சக்கரமே...
பாடற்குழு:
முன்பு வந்தவன் முன்னோடி
பின்பு வருபவன் பரிகாரி
நடுவில் வந்து நாம் நாடோடிகளாய் வாழ்கிறோம்
பிறப்பை மகிழ்ந்தோம் நம் கைசேர்ந்த குழந்தைகளில்
இறப்பை அறிந்தோம் நம்மைக் களைந்தோடும் உறவுகளில்
வாழ்வை அறிவோம் நாம் கடந்தோடும் எல்லைகளில்
(சக்கரமே...