உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 80 விறைந்தோடும் இரவுகள்
விறைந்தோடும் இரவுகள்
உன் நினைவிலே
உறங்காத நினைவுகள்
என் மனதிலே
நான் பார்க்கும் ஒவ்வொரு திசையும்
நான் கேட்கும் ஒவ்வொரு இசையும்
இனங்காமல் உள்ளம் அசையும்
உந்தன் நினைவில்தான்,
காலம் மாறலாம்
காயம் ஆறலாம்
நேசம் மாறுமோ?
என் அன்பே...
விடைசொல்லுமோ?
விபரீதமே
உயிர் மாய்ப்பது
அவன் வேலையே
வாழும் வாழ்கையே
காலக் கட்டணம்
தேதி தீர்ந்ததோ?
என் அன்பே...
பிறர் சூடும் பார்வைகளை
மனம் ஏற்பதில்லை
உனக்காக ஏற்றிய தீபம்
உயிர் தோற்கவில்லை
ஜோதியை சுமந்த கண்கள்
எரியாத திரியாய்த் திரியும்
பிரலாபன் பறித்த பூக்கள்
உந்தன் காணிக்கை,
கண்கள் நீர்குளம்
நெஞ்சம் போர்க்களம்
பொங்கும் பாற்குடம்
என் அன்பே...
அக்கரையாய்
வளர்ந்த உறவே
அக்கரையில்
கறைந்த பொழுதே
நீதி சாத்திரம்
தோற்றுப்போனது
கறுகலானது
என் அன்பே...