<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 80 சலனம் சபலம்(feelings வாத்திய இசைக்கு வடித்த பாடல்
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலை என்னுள் பிரசவித்த வாத்திய இசை அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!

 
சலனம் சபலம்
விருப்பம் விசனம்
குறையோ நிறையோ
தவிர்ப்பது முறையோ

நவரச நயங்கள்
கூட்டிப் படைத்துவிட்டான்
நொடிக்கொரு உணர்வு
என்றே எழுதிவிட்டான்

தொடரும்
(சலனம்...
மனமே மனமே

பூவில் தேனென கலந்து
காம்பில் முள்ளென முளைத்து
வருடுமோ நெறுடுமோ
சொல்ல முடியாது

உறங்கும்போதும் உறங்காது
உயரும்போதும் மறையாது
நிற்பதும் நிலைப்பதும்
மாறும் மனதுதான்

எட்டிப்போ என துறத்ததே
விட்டுப்போ என விலகாதே
முயற்சிப்போரை மறக்காமல்
புரட்சிப்போரென புறப்படு

விதியுடன் நடனமே
வீர செயல் இங்கு

(சலனம்...

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com