<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#8 மழைச்சாரல் சல சல சலவென
மழைச்சாரல் சல சல சலவென
உடல்களை நனைக்குது
திரு திரு விழிகள்
தீண்ட பார்க்குது

வெகு நாட்கள் பொரு பொரு பொரு என்ற
ஆசைகள் விடுபட
அனைகலும் சரிந்திட
உன்னைத் தந்திடு

உந்தன் பேர் பேரல்ல
எந்தன் மந்திரச் சொல்
கட்டிப்போட்டுவிட்டேன்
உன்னைக் கண் இமைக்குள்

(மழைச்சாரல். . .

புது காதல் மயக்கம் குடியேறும்
மொழி மாதம் தேதி மறந்துபோகும்
ஓர் சொல்லில் தங்கிடும் இசைத் தகடு
உன் பேச்சே பேசிடும் என் உதடு
மழைச்சாரல் தாங்காத பூமி
பெருமூச்சு விடத்தானோ ஆவி
வானத்தின் மோனத்தின் கோலத்தை
உள்ளத்தில் தைத்திட்ட உன் வித்தை போற்றவா

(மழைச்சாரல். . .



| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com