<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 79 செக்குமாடு போல
ஆண்:
செக்குமாடு போல ஒன்னை நான்
சுத்திவாரேன் பொண்ணே
பெட்டிபாம்பு போல ஆசைதான்
படுத்து கெடக்கு உள்ளே

வாசப் பருவமே வா
வாழைக் கொமரியே வா

அடி கெடஞ்சுபோட்ட நெஞ்சுக்குள்ள ஆசை வெண்ணை ஊறுதடி

(செக்குமாடு...

பெண்:
வெண்ணை இருந்தும் நெய்க்காக அலையும் பொண்ணு நானில்லையே
கிள்ளி முகந்து வாசம் பாக்க பூவும் நானில்லையே

வீசிப் பாயும் ஆத்துத் தண்ணிபொல மாமென் உன் போக்குதான்
ஆழம் தோண்டி பாத்தாத்தான் கெடைக்கும் ஊத்துத் தண்ணீரு நான்

ஆண்:
அன்னமே இனிமேல் அசை எண்ணங்கள் எண்ணங்களே

(செக்குமாடு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com