உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 77 காய்ந்திடும் நிலவொளி
காய்ந்திடும் நிலவொளி கண்களில் தெரியும்
கலைமகள் பார்வையில் கற்பூரம் கறையும்
கடலின் அலை நான் ததும்பி எழுந்து
அருந்திடவா உன் அழகின் விருந்து
(காய்ந்திடும்...
வானத்தை நோக்கி மரம் வளர்ந்தாலும்
இருப்பிடம் என்பது நிலத்தினில்தானே
வேறோர் ஊரில் நான் வசித்தாலும்
வேரூன்றியது உன் நெஞ்சில்தானே
(காய்ந்திடும்...