<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 76 நீ என் சுக சங்கீதமே
நீ என் சுக சங்கீதமே
என் நாவில் தினம் உன் ராகமே
உந்தன் பார்வையிலே
பார்வையிலே
மோகத்தின் ஆராதனை,
இந்தக் காதல் ஒரு சுக வேதனை

(நீ என் சுக...

நிறைகுடங்கள் தளும்பாதென்றால்
உன் இடை ஏறி நிற்கச்சொல் சரி பார்க்கிறேன்
கோவில் குளத்தில் உந்தன் கால் பட்டதால்
பல கமலங்கள் மூழ்கிய நிலை பார்க்கிறேன்

கோபுரம் மேலே ஆயிரம் குயில்கள்
ஓடையைத் தேடி பாடிடும் மொழிகள்
உந்தன் பெயரை உச்சரித்து சொல்ல
எந்தன் மனது தத்தளித்து செல்ல
நானும் குயிலாக

(நீ என் சுக...

குளிர்தெப்பங்கள் உந்தன் கண்கள் என்றால்
அதன் நெருக்கத்தில் நீந்திட வரம் தேவையா?
செவ்வந்தியே இதழ் கோர்வைகள் என்றால்
சுவை பார்க்க என் உதடு துணை தேவையா?

பாதுகாப்பாக சுவர் எழுப்பினாலும்
கார்த்திகை விளக்காய் என் காதலை வைப்பேன்
உந்தன் சொத்து என்று வைத்துக்கொள்ள
எந்தன் எண்ணம் இன்று ஆனதென்ன?
பெண்ணே பதில் கூறு

(நீ என் சுக...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com