உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 75 மடி சாய்ந்திடும் மாலை
பெண்:
மடி சாய்ந்திடும் மாலை
மழையில் நனையும் பூஞ்சோலை
மலராத வாழ்வை எண்ணி
இவள் பாடும் வேளை
(மடி…
பூங்காற்றில் ஆடும்
என் வாழ்கை ஓடம்
புயல் வந்து வீசும் முன்னே
கரை சேர வேண்டும்
கல்லாக்கி வைத்திருந்தேனே
கசிகிறது என் இதயம்
முள்ளாகிப் போன வாழ்வை
மலர வைத்ததுன் உதயம்
ஆண்:
மடி சாய்ந்திடும் மாலை
மழையில் நனையும் பூஞ்சோலை
மணமாகும் நாளை எண்ணி
இவன் பாடும் வேளை
(மடி…
மழை தர வேண்டி இந்த
மேகத்திடம் காத்திருந்தேன்
விடை தர வேண்டி உந்தன்
விழிகளையே பார்த்திருந்தேன்
தோகை விறித்து என்ன பயன்?
கோதை மனது மாறவில்லை
மறக்க நினைத்தும் என்ன பயன்?
வேறு மலரில் வாசமில்லை
(மடி…