உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
# 74 தோரண வாசலே
தோரண வாசலே
மண்டபம் பாழிலே
விருந்தினர் அழைத்துமே
வருவது காலனோ?
(தோரண...
நீலமில்லா வானம் நிரந்தரமோ?
சுழன்றிடும் பூமிக்கு சக்கரம் கழன்றிடுமோ?
எரிகின்ற சோலைக்கு காவலன் ஏன்?
எரிமலைக்குள்ளே பால் மழை ஏன்?
(தோரண...
விடைபெரும் வேளையில் வந்து
புகலிடம் தந்தால் பலனேது?
சிகை களைய, பூ உதிரும்
நசுங்கியபின் நார் எதற்கு?
உலகத்தின் கடைக்காட்சி கண்டால்
அது உன் முகமே
(தோரண...