<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 22, 2004
 
# 73 கீதங்கள் சப்த கீதங்கள்
கீதங்கள் சப்த கீதங்கள்
சேருங்கள் மேளதாளங்கள்
ஜீவநதி கூடி வரும்
ஆழ்மனதும் அமைதி பெரும்

(கீதங்கள்...

தோரணமாய் செவி வாசலுக்கே
வீற்றிருக்கும் புது இசைக்கருவி
நூதனமாய் இசை வழிகின்றது
நாதப்புணலில் தவழு

இசைத்தவன் எங்கோ இருக்கையிலே
இசைமழை பொழியுது என்னிடத்தில்
இசைப்பவன் ரசிகனைப் பிறிந்திடலாம்
இடைவெளி என்பது திசைகளில்தான்
இங்கு சங்கமம் என்பது இதயத்திலே...

(கீதங்கள்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com