உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 22, 2004
# 72 செவ்வானத்திலே
செவ்வானத்திலே ஓர் இறகு இட்டு
அவன் குழைந்தெடுத்தான் அவள் முகம் வரைய
மலை முகடுகளின் பல வளைவுகளை
மனம் படித்துக்கொண்டான் அவள் உடல் வரைய
(செவ்வானத்திலே...
திங்கள் குளிர்ந்திட கண்ணொளி
கடன் கொடுத்தாள்
பல மின்மினி புகைந்திட
புன்சிரித்தாள்
அவள் குளித்திட கடலே வலைவிறிக்கும்
அலை நாக்குகளில் இனி புல்லறிக்கும்
(செவ்வானத்திலே...
குரலின் மூலம் குயில்தான்
கூடத் தேனை கொஞ்சம் இறைத்தான்
பசும் வயலைக் கண்டு களித்தான்
பாவைப் பருவம் தீட்டி முடித்தான்
அவள் சிறுவிரல் சிறுநகம் கூட
மலர் இதழ்களில் முத்தினம் போல
இரவே வரவே உறவே
(செவ்வானத்திலே...