<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 22, 2004
 
# 71 பஞ்சனையில்
ஆண்:
பஞ்சனையில் சஞ்சரித்த
கற்பனைகள் கைவசமா?
சந்தேகம் வந்த போது
நான் என்னை கிள்ளிப் பார்த்தேன்
என் இதயவாசலெல்லாம்
உந்தன் இளமைக் கோலம் கண்டேன்

பெண்:
சந்தனத்தின் உள் விழுந்த
வெண்ணிலவாய் உன் கையில் நான் குளிர்ந்தேன்

ஆண்:
என் இருட்டரை வானத்தை கிழித்தவளே
பொன் பெளர்ணமி நிலவாய் உதித்தவளே

பெண்:
விதை உரமிட்டு உரமிட்டு பூவானது
உந்தன் சிறு விதை இன்னும் நீண்டு நீண்டு உயராதோ?

ஆண்:
சுவை உண்பதிலா இல்லை உணர்வதிலா?

பெண்:
என்னை பருகிடவா இல்லை உறுகிடவா

ஆண்:
அடி நேற்றுவரை நான் தனிமரம்தானே
நீ வந்தபின்னே தோரணம் தானே

(பஞ்சனையில்...

பெண்:
மனம் தனக்கென ஒரு வழி செல்கின்றது
உன் நினைவிற்கு பல வழி காண்கின்றது

ஆண்:
இனி துயரென்ன உயிரென்ன கிடக்குது
இரு மனங்களின் சமர்ப்பணம் மட்டும் போதாதோ?

பெண்:
இது வாய்ப்பதெல்லாம் காதல் வாழும்வரை

ஆண்:
உயிர் பிறவிகளின் கடை மூச்சு வரை

பெண்:
உன் சிறு நகம் கூட இதயத் தளத்தில்
சிகரத்தை போல பதிவானதென்ன?

(பஞ்சனையில்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com