<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 22, 2004
 
# 70 முகம் ஒரு பொன் அந்தி
முகம் ஒரு பொன் அந்தி
மனம் ஒரு பச்சோந்தி
உடை போல உள்ளத்தை மாற்றும்
பொல்லாதவள் வஞ்சி

(முகம்...

கடற்கரையில் கைகோர்த்து நடந்தது,
கணல் தெறிக்கும் பார்வைகளில் கறைந்தது,
தொலைபேசியில் முத்தம் கொடுத்தது,
தலைவைக்க உன் மடி விரித்தது,
எல்லாம் வேடங்களா வேசி?
வேறொரு ஆடவனின் தாசி

இந்தக் காதல் என்னும் ஒரு புனித நதியை
இன்று களங்கம் செய்துவிட்ட துரோகியே
என் மனம் பூக்கடை
உன் மனம் சாக்கடை
ஏன்?

(முகம்...

இன்று களைந்துபோனது எந்தன் கற்பனை
நீ பேரம் பேசிவிடும் விற்பனை
மனம் பிடித்து காதலித்தல் என் வழி
பணம் பிடித்து காதலித்தல் உன் வழி

நான் வரவா விடை கேட்டேன்
அவன் வரவு என்று கண்டேன்

வீண் பொழுது போக்க ஒரு பொம்மை போல
எனை ஆடிப் பார்த்து விட்டு சென்றியே
திரி இங்கு எரியுது
விளக்கங்கு திறியுது
ஏன்?

(முகம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com