உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, April 22, 2004
# 69 விழாக் காலமிது வனம் பூக்கிறது
விழாக் காலமிது வனம் பூக்கிறது
வசந்தம் வரும் நிலையே
எந்தன் பார்வை பூக்க உன்னை வேண்டும்
விண்மீன் பல வானிலிருந்தென்ன திங்கள் நீங்கும் நாளிலே?
பெண்ணின் நிலை என்று மாறும்?
வாழ்கை விதியென்று சாக்கு சொல்லிவிட
நம்பும் பேதை நெஞ்சமே
ஆணும் பெண்ணும் என்று சேர்த்துச் சொல்லும் ஊரில்
விதவைப் பூவின் நிலை
வேண்டாத கேள்வி
(விழா...
சுவிசேஷங்களை ஓதும் எந்த மதமும் கூறவில்லையே
அவனை நீங்கிய அவள் நிலை
என்ன கூறவில்லையே
அன்று கூடலில் பெற்றது
இன்று பிறிந்ததில் அழிந்ததா?
சொர்க வாசலின் கதவுகள் இந்த
மாந்தரை நினைப்பதா?
(விழா...