<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 68 சிந்திப்போகும் முகிலே முகிலே
சிந்திப்போகும் முகிலே முகிலே
மழையெனும் முத்துத் தூறல் இனிதே இனிதே
முகவனம் மலர்கிறது
முதுகிலும் நானைகிறது
இளைஞரின் தவமறிந்து
தரிசனம் வழங்கிடுது
புனலென பொங்கிடுதே சாலையிங்கு

(சிந்திப்போகும்...

கைக்குட்டை கூந்தலில் பொய்க்குடையாய் மாறாதோ?
காப்பிக்கடை புகைகூட கற்பூரம்போல் வீசாதோ?
அழுக்குப்போல அரிதாரம் முகத்தை நீங்கி ஓடுதே
எட்டிப்போகும் வாகனம் எழுப்பிப்போகும் தாரையே
நெஞ்சோரத்தில் என்றும் நீராடிடும் உன் என்னமே

(சிந்திப்போகும்...

மின்னல் கீற்று தோன்றுதே
வானவர் எடுத்த புகைப்படமோ?
சத்தம் போட்டு இடிப்பது
மூலவர் கை தட்டி நகைப்பதோ?
முல்லைக் காட்டின் வாசனை
கொள்ளை கொண்டு போகுதே
மூங்கில் காட்டின் ஓசைகள்
மெளனக் காற்றைக் கூசுதே
செந்தாமரை குளிபாட்டவே முனைந்ததோ?

(சிந்திப்போகும்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com