உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
# 67 மூச்சுக்கட்டிப் பாடல்
மூச்சுக்கட்டிப் பாடல் ஒன்று பாடிக்காட்டத் தேவையோ?
மெட்டுக்கட்டிப் பாடும்போது அர்த்தம் ஞானம் ஊமையோ?
ரெண்டும் சேர்ந்த ஒன்றைப் பாடி காட்டவா?
சந்தத்திலே வார்த்தை ஊஞ்சல் ஆட்டவா?
முக்கனியில் தேனைக் குழைக்க வந்திடும் சுவையையும்
மிஞ்சிவிடும் கடலலையில் மின்னிடும் நிலவொளி
பள்ளியரை தந்த சுகமும் இன்னொரு உயர்நிலை
பெற்றவளின் இன்பப் புன்னகை அதன் முன்னிலையில்
சொல்லிவிட குறையா எத்தனையோ அழகு
செய்துவிட்டு மறைந்தான் சொர்கத்திலே இறைவன்
கிளைகளில் இலையின்றி பனி மட்டும் உறங்குது
கவிஞனின் மனதினில் இது ஒரு அழகியல்தான்
(மூச்சுக்கட்டி...
ஊமையாகப் பிறந்திருந்தால் பார்வை இசை உண்டு
குருடாகப் பிறந்திருந்தால் இசை மொழியும் உண்டு
செவிடாகப் பிறந்திருந்தால் பார்வை மொழி உண்டு
முடமாகப் பிறந்துவிட்டால் மேற்கண்ட மூனும் உண்டு
இருப்பதை மறந்து இல்லாத நினைப்பே
கழித்திடும் வாழ்வில் உண்டாக்கும் கசப்பே
இருப்பவன் இல்லை என்றும் அடுத்தவன் தொல்லை என்றும்
நினைக்கிற வரையினில் உறுப்பட வழி இல்லையே