<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 66 செந்தாழை
ஆண்:
செந்தாழை
சுடர் அதிகாலை
எழில் மிஞ்சாதோ
குழி கன்னங்கள்?

பெண்:
மகரந்தம்
பனிப் பூ மஞ்சம்
பறைசாற்றாதோ
இணைந்தோர் நெஞ்சம்?

ஆண்:
ரவி வர்மன் வரைய
அருள் பிரம்மன் இசைய
அரும்பிய அழகே
உன் வடிவம்

பெண்:
சந்தனத்தில் நனைத்து
பன்னீர்தனைத் தெளித்த
மலரென மனதை
மணக்க வைத்தாய்

ஆண்:
அன்பின் அகல் விளக்கு பன்பின் பிரதிபளிப்பு,

பெண்:
நெஞ்சில் பரபரப்பு என்றும் அவன் நினைப்பு

(செந்தாழை...

பெண்:
கொட்டுகின்ற அருவி
தத்திச் செல்லும் ஓடை
மண்ணில் மழை வாடை
காதல் குணம்

ஆண்:
பச்சை வயல் செழிப்பை
பூங்குயிலின் அழைப்பை
கொண்டுவரும் தென்றல்
மொழி காதல்

பெண்:
சங்கு முழங்கிடுதே திங்கள் திகழ்ந்திடுதே

ஆண்:
இன்பம் இழைந்திடுதே எல்லை அழிந்திடுதே

(செந்தாழை...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com