<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 21, 2004
 
# 64 பொற்பாதமே வா வா
பொற்பாதமே வா வா
தென்றலாய் ஓடிவந்தேன் பூவை இல்லை
கண் போன நாளில் மன்றாடவில்லை
கண் வந்த பின்னே கண்ணீரின் பிள்ளை
பொற்பாதமே வா வா

பார்வையும் வந்த பொழுதிலே
மறைமுகம் இன்னும் தேவையோ?
பாதங்கள் பதித்து நடமிட
பாறையும் வாடி கறையுமே?
பருகினேன் உந்தன் ஆடல் கலையினை
பழகினேன் உந்தன் அன்ன நடையினை
குருடன் என்ற போதும் செவியினால்
உன்னை சேகரித்தவன் செல்வியே

சிறையை விட்டிங்கு வெளியேற்றி என்
இதயம் மட்டும் ஒரு வெற்றிடமென்று
சொல்லுவதால் சுவைத்திடுமா?
இது விடுதலையா?
கண்ணை எடுத்துவிடு
பெண்ணைக் கொடுத்துவிடு
காலத்தின் போக்கினை பின்வழி திருப்பிடு
கவிதைகள் மலர்ந்திடும் நடனமும் தொடர்ந்திடும்
கடந்ததில் புதைந்த இதையமே

கலையின் கறுவரை களைத்தது வன்முறை
கேளுங்களே ஞயாயங்களே தேவர்களே
நடன தேவியே
நெஞ்சுத் தாளம் கேட்டுவா
சலங்கை...ஜதியே
புவியாவும் உந்தன் பாதம் கீழே
நடன தேவியே...

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் நிலை
இதுதானோ? இதுதானோ?
புயலாக வந்து பொறி தட்டிவிடும் கலை
இதுதானோ? இதுதானோ? இதுதானோ?

குருடனின் நெஞ்சிற்குள் திரி வளர்த்தாய்
கண் வந்த வேளை ஏன் விளக்கனைத்தாய்?

சிந்தும் ரத்தம் நெஞ்சில் நித்தம்
உன்னை இன்றி உள்ளம் பித்தம்
உள்ளுக்குள்ளே ஊமைச் சத்தம்
கண்ணீர் கோக்கும் காதல் மேகம்
சிந்தும் நீரே சோகக் கீதம்
பாதத்திற்கென் பாடல் முத்தம்
பிறியாவிடையில் விடையும் உண்டோ?
கேட்பதற்கு இல்லை கேள்வி இங்கே
நடன தேவியே

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com